‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Thursday, October 25, 2012

குழந்தைப் பாடல்கள்



(உங்கள் குழந்தைகளின் தமிழறிவை வளர்த்திட...)

மாமரம்
மாமரமாம் மாமரம்
கிளைகள் நிறைந்த மாமரம்
மரம் முழுதும் இலைகளாம்
பட்டுப்போனால் உதிருமாம்
உதிர்ந்துபோனால் என்ன இப்போ,
திரும்பத் திரும்ப முளைக்குமே!

மூட்டை
மூட்டை நல்ல மூட்டை
சுமக்க உப்பு மூட்டை
உள்ளே நிறைய புத்தகம்
படித்து சென்டம் வாங்கணும்
அப்பா அம்மா தூக்கினால்
விழுந்து வாருவார்களே
நான் மட்டுமே தூக்குவேன்
சோட்டா பீம் போல் பலசாலி!

ஆன்ட்டி
ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ஆன்ட்டியாம்
தினமும் அவள் கல்லூரிக்கு
ஸ்கூட்டியிலே போவாளாம்
அப்பா ஒரு நாள் பார்த்தாராம்
இனிக்கப் பேசி வழிந்தாராம்
அம்மா ஒரு நாள் பார்த்தாளாம்
அப்பா முதுகில் வைத்தாளாம்!

நூடுல்ஸ்
அம்மா செய்த நூடுல்ஸ்
புழுப்புழுவாய் இருக்குமே
கையிலிருந்து வழுக்குமே
வாயில் இட்டால் சுவைக்குமே
பாட்டிக்குத்தான் பிடிக்காது
'ஆண்டவனுக்கே அடுக்காது'
'இட்லி, தோசை செய்யவே
நேரம் எங்கே இருக்குது?'
நீயும் ஒண்ணு வாங்கிக்கோ
டாட்டூகூடக் கிடைக்குது!

எம்.எல்.ஏ.
எம்.எல்.ஏ-வாம் எம்.எல்.ஏ.
எங்க தொகுதி எம்.எல்.ஏ.
ஓட்டு கேக்க வருவாராம்
நிறைய காசு கொடுப்பாராம்
எனக்குக் கிடைக்கும் லட்டு
அம்மாவுக்கு வெறும் மூக்குத்தி!

கனவு டீச்சர்
கனவில் டீச்சர் வருவாரே
தினமும் சாக்லேட் தருவாரே
லேட்டாய் நாமும் வந்திட்டால்
பெஞ்சில் ஏறி நிற்பாரே
ஹோம்வொர்க்கை நாம் மறந்திட்டால்
பிரம்பால் அடித்துக்கொள்வாரே
வகுப்பின்போது பேசினால்
வெரி குட் என்றே சொல்வாரே
கனவில் கலக்கும் என் டீச்சர்
நிஜத்தில் ஏன்தான் அரை லூஸோ?

No comments:

Post a Comment

What's in your mind?