‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Wednesday, June 3, 2015

Nanayam Vikatan 26/4/2015
சேமிப்பும் முதலீடும்... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!
இந்தியர்கள் பொதுவாகவே சேமிக்கும் பழக்கத்தை இயல்பாகக் கொண்டவர்கள். இந்த சேமிக்கும் பழக்கம் ஒருவரை பாதிப்பிலிருந்து நிச்சயம் காப்பாற்றும் என்றாலும் இதுவே ஒருவரை பெரும் பணக்காரராக உயர்த்திவிடாது. இந்தியாவில் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களே அதிகம் என்பதால், அவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள சேமிக்கும் பழக்கத்தில் இருந்து முதலீடு செய்யும் பழக்கத்துக்கு மாறவேண்டும். சேமிப்பும் முதலீடும் ஒன்று என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.



சேமிப்பு என்பது செலவுகள் போக மீதி உள்ளதை பிற்காலத் தேவைக்காக எடுத்து வைப்பது.  உதாரணமாக, உண்டியலில் போடும் பணம் என்றைக்கும் வளராது. நாம் சிறுக சிறுக சேமிக்கும் பணம் அப்படியே இருக்கும். சிறிது காலம் கழித்து விலைவாசி ஏற்றத்தோடு ஒப்பிடும்போது, அதன் மதிப்பு வெகுவாகக் குறைந்திருக்கும்.

உதாரணமாக, ஒருவர் ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாயை எஃப்டியில் சேமித்து வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு 7% வட்டி கிடைக்கிறது. அதேநேரத்தில், அந்த ஆண்டில் பணவீக்க விகிதம் 7% என்று வைத்துக்கொண்டால், வட்டி மூலம் கிடைக்கும் லாபம் பணவீக்கத்துக்கே சரியாகப் போய்விடும். இதனால் எந்த லாபமும் கிடைக்காது. நமது சேமிப்பானது பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தந்தால் மட்டுமே நமக்கு லாபம் கிடைக்கும்.

ஆனால், முதலீடு என்பது  நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தரவல்லது. உதாரணமாக, ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தாலோ அல்லது எஸ்.ஐ.பி. முறையின் மூலம் நீண்ட காலத்துக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலோ 12 முதல் 15% கூட்டு வட்டியில் வருமானம் வளரும். உடனடித் தேவைக்கு சார்ட் டேர்ம் ஃபண்டுகளான லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய லாம். இதற்கு 8% முதல் 9% வரை வருமானம் கிடைக்கும்.

நம்மில் பல பேர் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் போட்டு வைக்கிறார்கள். இன்னும் சிலர் இன்ஷூரன்ஸை முதலீடாக நினைத்து காப்பீடு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டி வருகிறார்கள். இன்ஷூரன்ஸ் என்பது முதலீ்டு அல்ல. அது நம் வாழ்க்கைக்கான பாதுகாப்பு மட்டுமே. ஒருவர் எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுப்பதைக் காட்டிலும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதன் மூலம் குறைந்த பிரிமீயத்தில் அதிக  இன்ஷூரன்ஸ் கவரேஜை பெறமுடியும்.

இன்ஷூரன்ஸ், வங்கி எஃப்டி. போன்ற பழமையான முதலீட்டு முறைகளில் சேமிப்பதைவிட மியூச்சுவல் ஃபண்டுகளில் 15 - 20 ஆண்டு காலத்தில் முதலீடு செய்வது அதிக வருமானத்தைப் பெறுவதற்கான புத்திசாலித்தனமான வழியாகும். ஆனால், நம்மில் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே அதை அரசாங்கம் நடத்துகிறதா அல்லது தனியார் நடத்து கிறதா என்று கேட்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அரசாங்கமே நேரடியாக நடத்துவ தில்லை என்றாலும் அரசின் கண்காணிப்பு மிக அதிகமாக இருப்பதால், இந்த ஃபண்ட் நிறுவனங்கள் திவால் ஆகிவிட வாய்ப்பே இல்லை.



இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிர்வகிக்க என தனியாக ஃபண்ட் மேனேஜர்கள் இருக்கிறார்கள். ஒரு நல்ல நிதி ஆலோசகர் மூலம் மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்யும்போது நம் முதலீட்டு ரிஸ்க் வெகுவாகக் குறைந்துவிட வாய்ப்புள்ளது. தவிர, நம் முதலீடு நாம் எதிர்பார்த்த மாதிரி வளர்கிறதா, இல்லையா என்பதையும் எப்போது வேண்டுமானாலும் நம்மால் சோதித்துப் பார்த்துக் கொள்ள முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பங்குச் சந்தை சார்ந்தது என்பதால், அதில் ரிஸ்க்கே இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும், பிஎஸ்இ-ன் குறியீடான சென்செக்ஸ் ஆரம்பித்த ஆண்டு 1979 நாள் முதல் இன்று வரையிலான அதன் வளர்ச்சியை 10 ஆண்டுகளாக பிரித்துப் பார்த்தால், ஒவ்வொரு பத்தாண்டிலும் அது 6 மடங்கு வளர்ச்சி கண்டு இருக்கிறது. இனிவரும் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமான வளர்ச்சியைக் காணும் என்பதால் மியூச்சுவல் ஃபண்டில்  முதலீடு செய்வதற்கு இது சரியான தருணம்தான்.



நாம் செய்யும் முதலீடு எதுவாக இருந்தாலும் அதன்மூலம் கிடைக்கும் வட்டி அல்லது வருமானம், வரிச் சலுகை ஏதும் உண்டா, முதிர்வுத் தொகைக்கு வரி ஏதாவது கட்டவேண்டுமா என்பதை  மேலே அட்டவணையாகத் தந்திருக்கிறேன். இந்த அட்டவணையைப் பார்த்து, உங்கள் முதலீடு இனி எப்படிப் பட்டதாக இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் உங்கள் கையில்தான். உங்கள் முதலீடு நல்ல லாபம் தருகிற மாதிரி அமைந்தால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமே!

Monday, June 1, 2015

Ananda Vikatan 22/4/2015 - Maniratnam Interview

கி.கார்த்திகேயன், ம.கா.செந்தில்குமார்

'' 'மௌனராகம்’ல ஆரம்பிச்சு 'ஓ காதல் கண்மணி’ வரைக்கும் ஒவ்வொரு டிரெண்டுக்கும் உங்களைப் பொருத்திக்கிறீங்க. எப்படி உங்களை அப்டேட் பண்ணிக்கிறீங்க?''

''நான் அதுக்குனு தனியா எதுவும் கோர்ஸ் படிக்கிறது இல்லை. அப்படி யாரும் பண்ணவும் முடியாது. சும்மா கண்ணைத் திறந்து வெச்சிருந்தாலே போதும். சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கலாம். முன்னாடி என்கிட்ட பேட்டி எடுக்கிறப்போ, டிரான்சிஸ்டர் சைஸ் வாய்ஸ் ரிக்கார்டர் கொண்டு வருவாங்க. ஆனா, இப்போ நீங்க ஸ்மார்ட் போன்லயே எல்லா வேலைகளையும் முடிச்சுடுறீங்க. இப்படி நம்மளைச் சுத்தி இருக்கிற குடும்பம், குழந்தைகள், நண்பர்கள்னு எல்லாரையும் கவனிச்சுட்டே இருந்தாலே போதும். உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம். ஆனா, அந்த மாற்றங்களை நாம அக்செப்ட் பண்றோமா இல்லையா... அங்கேதான் நாம அப்டேட் ஆகிறோமா இல்லையாங்கிறது தீர்மானிக்கப்படும். 'இது என்ன இப்படிச் சொல்றாங்க. முன்னாடி இப்படிக் கிடையாதே...’னு யோசிச்சாலோ, 'இது சரி... இது தப்பு...’னு எதுக்கெடுத்தாலும் தீர்ப்பு சொன்னாலோ... நாம அப்டேட் ஆகத் தயார் இல்லைனு அர்த்தம். எந்த மாற்றமும் நம்ம அனுமதிக்காகக் காத்திருக்காது. அது மாறிட்டே இருக்கும். அந்த மாற்றம் நம்மளை அனுமதிக்குதானு மட்டும்தான் நாம பார்க்க முடியும். நான் ஒவ்வொரு மாற்றத்தையும் ரசிச்சு ஏத்துக்கிறேன்!''  

J.K. - சிற்சபையின் பெருஞ்சபேசனாக, நடுவே ஜெயகாந்தன்

Ananda Vikatan 22/04/2015


வைரமுத்து
ஒருமுறை அவரைச் சாப்பாட்டுக்கு அழைத்துப் போயிருந்தேன். எங்கள் உரையாடலின் நிறைவில் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். 'நீங்கள், மரபு மீறிய வாழ்க்கையை வாழ்ந்துவந்திருக்கிறீர்கள். பல நேரங்களில் பலரைக் காயப்படுத்தி இருக்கிறீர்கள். காயப்படுத்துவது உங்கள் நோக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், காயம் என்னவோ நிஜம். நீங்கள் வாழ்ந்த வாழ்வில் எதை நினைத்தாவது வெட்கப்பட்டது உண்டா? அது செய்திருக்கலாகாது என நினைத்த சம்பவங்கள் எவை?’ என்றேன். ரொம்ப நிதானமாக அவர் சொன்ன பதில் எனக்குப் பிடித்திருந்தது. 'நான் ஒருபோதும் வெட்கப்பட்டது இல்லை. நான் ஒருபோதும் எதையும் அவமானகரமாகக் கருதியது இல்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்ததந்த நேரத்து நியாயம்’ என்றார்; வியந்தேன்


ஜே.கே., ஓர் அற்புதமான பாடலாசிரியர். 'பாதை தெரியுது பார்’ படம் தோல்வி; பாட்டு வெற்றி. காரணம், ஜே.கே. அதில் அவர் எழுதிய 'தென்னங்கீற்று
ஊஞ்சலிலே...’ இப்போது கேட்டால்கூட சுகானுபவம். பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜானகி குரல்களில் இன்று வரை ரீங்காரமிடுகிற பாடல். அடுத்து, 'வேறு இடம் தேடிப் போவாளோ...’ என்ற அழகான பாடல். அதில் 'நூறு முறை இவள் புறப்பட்டாள்...’ என்றவர், 'விதி நூலிழையில் இவள் அகப்பட்டாள்...’ என முடித்திருப்பார். அந்த 'நூ’வில் எந்தக் கவிஞனும் மாட்டுவான். அது அவனே அவனுக்கு வைத்துக்கொள்கிற கண்ணி. மோனைக்குப் பஞ்சமான முதல் எழுத்தில் தொடங்கிவிட்டு முடிப்பதற்குள் விழி பிதுங்குவார்கள் பலர். ஆனால், 'நூலிழையில்’ என்ற மோனையிட்டு அதில் இருந்து லாகவமாக வெளியேறியிருப்பார். தொழில்முறைப் பாடலாசிரியன் செய்வதை, அவர் செய்திருப்பார்

ஒருமுறை தேர்தலில் நின்றார். படுதோல்வி. 'ஏன்?’ எனக் கேட்டதற்கு, 'என் வாக்கை நான் எனக்கே போட்டுக்கொள்ள வேண்டாமா? அதற்குத்தான்’ என்றார். இப்படிப் பல்வேறு சமயங்களில் அவர் சொன்ன கூற்றுகள் வெகுபிரபலம். 'எனக்குத் தமிழ் தெரியாது. ஆனால், தமிழுக்கு என்னைத் தெரியும்’. இது அவரின் கூற்றுகளில் மிகவும் புகழ்பெற்ற வாசகம். பாரதிராஜா 'ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பில் படம் எடுத்தபோது ஒரு கவிஞர், 'அது என் கவிதைத் தொகுப்பின் தலைப்பு’ எனக் கூறி இழப்பீடு பெற்றார். அதே பாரதிராஜா, 'புதிய வார்ப்புகள்’ என்ற தலைப்பில் படம் எடுத்தபோது, 'இது உங்கள் கதையின் தலைப்பாயிற்றே’ என ஜெயகாந்தனிடம் கூறி இருக்கிறார்கள். அதற்கு ஜே.கே., 'இல்லாதவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இதில் என்ன இருக்கு?’ என்றாராம்.

இளையராஜா

இப்போ நான் எதுவும் எழுதுறது இல்லை. ஓர் எழுத்தாளனுக்கு வாழ்க்கை எவ்வளவு நீளமானது என்பது கணக்கு அல்ல. அது எவ்வளவு கூர்மையாக இலக்கை நோக்கிப் போய், மக்களைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதுதான் கணக்கு. நான் நல்லவனா... கெட்டவனா? 'கெட்டவன்’னு சொன்னா... அது இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த சலுகை. 'நல்லவன்’னு சொன்னா, அதுக்கும் இந்தச் சமூகம்தான் காரணம். இந்தச் சமூகம் நமக்கு என்ன அனுபவத்தைக் கொடுக்குதோ அதைத்தான் நாமும் இந்தச் சமூகத்துக்குக் கொடுக்க முடியும்’ எனச் சொல்லிச் சிரித்தார்.

ஜே.கே. சில குறிப்புகள்தொகுப்பு: தமிழ்மகன்
'குற்றங்களுக்காகத் தண்டிப்பது வேறு; அவமதிப்பது வேறு. தண்டிக்கும்போது 'குற்றவாளி’ மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும். அவமதிக்கிறபோது மனிதனே அவமதிக்கப்படுகிறான். ஒரு தனிமனிதக் குற்றவாளியைப் பகிரங்கமாக அவமதிக்கிறவர்கள்... அந்தக் குற்றம்புரிந்தவனைவிடவும் கொடியவர்கள்!’ 

 'இந்தத் தேர்தல் முறையில் தவறாக முத்திரை குத்தப்பட்ட ஓட்டுக்கள் மட்டும் செல்லாதவை அல்ல; தோற்ற ஓட்டுக்கள் எல்லாமே சொல்லாதவை ஆகின்றன. இது அதர்மமானது. '500 ஓட்டுக்கள் வாங்கியவன் சகல மரியாதைகளோடும் பதவிக்குப் போவான். ஆனால்,499 ஓட்டுக்கள் வாங்கியவன் எந்தவித அங்கீகரிப்பும் இல்லாமல் செல்லாக்காசாகிப்போவான்’ என்பது என்ன நியாயம்? இது சூதாட்டம் அல்லவா? இது எப்படி மக்களுடைய பிரதிநிதித்துவம் ஆகும்?’

'காதல் என்பது, நமது கதைகளைப் பொறுத்தவரை இருவர் செய்துகொள்ளும் நிச்சயதார்த்தம். 'உன்னை நான் காதலிக்கிறேன்’ எனச் சொன்ன பாவத்துக்காக அவன், அவளையே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது செத்துப்போக வேண்டும். விவகாரத்தைக்கூட அனுமதிப்பார்கள்போல் இருக்கிறது. இந்தக் காதல் ரத்தை ஒருத்தி பிரயோகித்தால், நமது பண்பாடு கெட்டுப்போகும் எனச் சொல்கிறார்கள்!’
செழியன்
தமிழில் எழுதி ஜீவிக்க முடியும்னு நீங்க நம்புனீங்களா?’ என ரவி கேட்டார்.
'தமிழ் ஜீவிக்கட்டும் என நம்பித்தான் நான் எழுதினேன்’ என்றார்.


Writer Jayakanthan : Documentary by Ravi Subramanian
எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் -