‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Saturday, March 28, 2020

மனிதனின் ஞாபகம்

மனிதனின் ஞாபகம்

அலாவுதீன் எந்த தேசத்தவன் ?

பெர்சியா(Arab) or சீனா ?

பெரும்பாலும் அலாவுதீனும் அற்புத விளக்கும் அராபிய கதை என்பதால், அலாவுதீன் பெர்சியாவை சேர்ந்தவன் என்ற எளிமைப்படுத்தப்பட்ட முடிவு, Simplified decition, நம் மூளையில் ஏற்படுகிறது. But அலாவுதீன் சைனாக்காரன்.

நம் ஞாபகத்தையும் கம்ப்யூட்டர் ஞாபகத்தையும் அதனால்தான் ஒப்பிடமாட்டார்கள். கம்ப்யூட்டர் ஞாபகத்தில் பிசகே இருக்காது. உள்ளது, போட்டது மாறாமல், பிசகாமல் வெளியே வந்து விடும் .

நம் ஞாபகங்கள் அனுபவ அடிப்படையில் ஏற்பட்ட மழுப்பல்களும் எளிமைபடுத்துதல்களும் நிறைந்ததால் குறைபட்டுள்ளது  

No comments:

Post a Comment

What's in your mind?