‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Friday, June 15, 2012

நான் இந்தியன் ----- தமிழ்

''தமிழ் மொழிக்கே உரிய தனிப் பெருமையை மற்ற தொன்மையான மொழிகளோடு ஒப்பிட்டுக் கூற முடியுமா?''




''அமெரிக்காவின் மிகப் பெரிய எம்பயர் ஸ்டேட் கட்டடம்போல 30 மடங்கு பெரிதான பிரமிடுகளைக் கட்டிய எகிப்தி யர்கள் பேசிய எகிப்திய மொழி இப்போது இல்லை.



'இந்த உலகத்தையே தன் காலடியில் விழவைப்பேன்’ என்று சொன்ன மாவீரன் அலெக்சாண்டர் பேசிய ஆதி கிரேக்க மொழி இப்போது இல்லை. ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர் பேசிய பாலி மொழி இப்போது இல்லை. அன்பிற்கரசர் இயேசுநாதர் பேசிய ஹீப்ரு மொழியின் கிளை மொழியான அரமிக் இல்லை.



ஆனால், இத்தனை மொழிகளோடு பிறந்து, வளர்ந்து தன் தோழமை மொழிகள் எல்லாம் சிதைந்தபோதிலும் இன்றைக்கும் வாழ்ந்து, வளர்ந்து நிற்கும் ஒற்றை மொழி வாழும் செம்மொழியாம் நம் தமிழ் மொழிதான்.''



- க.அருள், ஆரணி.

No comments:

Post a Comment

What's in your mind?