தன் ஆறு வருட கால தியானத் தேடல் வீணாகிப்போனதே என்ற எண்ணத்தில் இருந்தபோது, பணிப் பெண் பால்சோறு கொண்டுவந்தாள். மிக நீண்ட நாட்கள் கழித்து உணவை அனுபவித்துச் சாப்பிட்டபோது, சித்தார்த்தன் மனதில் ஒரு மின்னல் மின்னியது. தன் தேடலுக்கான விடை கிடைத்தது போல் இருந்தது. உடனே, அரண்மனையை விட்டுக் கிளம்பிப் போய், போதி மரத்தடியில் அமர்ந்தான். இத்தனை நாட்களாக வெளியில் தேடிக்கொண்டு இருந்த விடையை தனக்குள் தேடத் தொடங்கினான். 49 நாட்கள் கடந்து ஒரு பௌர்ணமி தினத்தில் தேடலுக்கு விடை கிடைத்தது. மனிதகுலம் முழுவ துக்கும் இன்பம் தரக்கூடிய மந்திரச் சொல் 'இக்கணத்தில் வாழு' என்பதாக உதித்தது...
... வாழ்வின் எல்லா துன்பங்களையும் தீர்த்துப் புது வழி காட்டும் அவரது 'இக்கணத்தில் வாழு' என்னும் மந்திரச் சொல்லின் மகத்துவம், வாழ்வின் ஒளிவிளக்காக மனிதர் களுக்குக் காலமெல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.
- 'மந்திரச் சொல்' நூலில் இருந்து.
No comments:
Post a Comment
What's in your mind?