‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Wednesday, July 4, 2012

முன்னேறியவனை முறைத்துப் பார்க்காதே..!

உழைப்பு உயர்வு தரும், உழைத்தால் முன்னேறலாம் என பொருளாதார முன்னேற்றத்துக்கு அடுக்கடுக்கா ஆயிரம் அறிவுரையை யார் வேண்டுமானாலும் எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால், அந்த முன்னேற்றத்துக்கு அவர்கள் படும் பாடு அளப்பரியது.

அது, தனக்கான முன்னேற்றமா; இல்லை இந்த சமூகத்துக்கான முன்னேற்றமா..? இல்லை தனது சமுதாயத்திற்கான முன்னேற்றமா என நினைத்து யாரும் வகுத்துப் பார்த்து உழைப்பதில்லை. ஆனால், ஒருவன் முன்னேறிவிட்டால், அந்த சமுதாயமும், சமூகமும் அவனை வாயார உயர்த்திப் பேசும். 

அப்படி ஒரு முன்னேற்றம் இன்றைக்கு ஒரு சமுதாய ரீதியாக நடைபெற்றதை நாம் எல்லோரும் அறிவோம். இதைத்தான், 'முன்னேறியவ¬க் கண்டு முறைத்துப் பார்க்காதே; அவன் முழித்திருந்த இரவுகளை நினைத்துப் பார் என்பார்கள்.

No comments:

Post a Comment

What's in your mind?