ஒரு முறை, சுவாமி விவேகானந்தர் சொற் பொழிவு செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒருவர் எழுந்து, ''இறை உணர்வு கொள்ள வேண்டும் எனில், எதற்காக ஆலயம் செல்ல வேண்டும்? கோயிலுக்குச் செல்லாமல் இறை உணர்வை அடைய முடியாதா?'' என்று கேட்டார்.
விவேகானந்தர் பதிலேதும் கூறாமல் அவரிடம், ''குடிக்கத் தண்ணீர் கொண்டு வா'' என்றார். அவர் ஓடிச் சென்று செம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்.
உடனே விவேகானந்தர், ''நான் தண்ணீர்தானே கேட்டேன். கூடவே செம்பு எதற்கு?'' என்றார்.
அவர், ''சாமி! தண்ணீர் எடுத்து வர ஆதாரம் வேண்டுமல்லவா? வெறும் நீரை மட்டும் கொண்டு வர இயலாதே...'' என்றதும் விவேகானந்தர், ''அதேபோல் இறை உணர்வு கொள்ள ஆலயம் தேவை. ஆலயம் ஒரு கருவி. ஆலயமே ஆதாரம்!'' என்றார்.
- ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி
விவேகானந்தர் பதிலேதும் கூறாமல் அவரிடம், ''குடிக்கத் தண்ணீர் கொண்டு வா'' என்றார். அவர் ஓடிச் சென்று செம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்.
உடனே விவேகானந்தர், ''நான் தண்ணீர்தானே கேட்டேன். கூடவே செம்பு எதற்கு?'' என்றார்.
அவர், ''சாமி! தண்ணீர் எடுத்து வர ஆதாரம் வேண்டுமல்லவா? வெறும் நீரை மட்டும் கொண்டு வர இயலாதே...'' என்றதும் விவேகானந்தர், ''அதேபோல் இறை உணர்வு கொள்ள ஆலயம் தேவை. ஆலயம் ஒரு கருவி. ஆலயமே ஆதாரம்!'' என்றார்.
- ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி
No comments:
Post a Comment
What's in your mind?