‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Sunday, July 15, 2012

கொஞ்சம் காபி குடிக்கலாமா?




கி.கார்த்திகேயன்




The Habit Of Winning    -   பளிச் என உள்ளடக்கத்தைச் சொல்லிவிடும் தலைப்பு. பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்த இந்தப் புத்த கத்தின் ஆசிரியர் பிரகாஷ், பிரபலங்களின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பளிச் எனப் புரியவைக்கிறார்.
 பெனால்ட்டி கிக்!
கால்பந்துப் போட்டிகளின்  பெனால்ட்டி  கிக் பார்த்து இருக்கிறீர்களா? கோல் கம்பத்தில் இருந்து 11 மீட்டர் தூரத்தில் பந்தை வைத்து உதைக்கச் செய்வார்கள். அந்தப் பந்து கோல் வலைக்குள் செல்லாமல் கோல் கீப்பர் தடுக்க வேண்டும். அப்போது அந்த கோல் கீப்பர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை நமது வாழ்க்கையிலும் அடிக்கடி எதிர்கொள்வோம்... எப்படி?
அணியில் யாரோ ஒருவர் செய்த தவறுக்கு கோல் கீப்பருக்கு விதிக்கப்படும் தண்டனையே பெனால்ட்டி கிக். 11 அடி தூரத் தில் இருந்து பந்து உதைக்கப்பட்டதும் 0.1 நொடி மட்டுமே யோசிக்கவும் செயல் படவும் கோல் கீப்பருக்கு அவகாசம் கிடைக்கும். அந்த மைக்ரோ நொடிக்குள் பந்து இடமா...வலமா, மேலா... கீழா எந்தப் பக்கம் பாயும் என்பதைத் தீர்மானித்து அந்தத் திசையில் பாய்ந்து பந்தைத் தடுக்க வேண்டும். தாவிப் பாய்ந்து பந்தைத் தடுத்துவிட்டால் ஓ.கே... ஒருவேளை பந்து கோல்வலைக்குள் சென்றுவிட்டால்.... அவ்வளவுதான். கோல் கீப்பருக்கு வசை மழை பொழியும். இது பெனால்ட்டி கிக்கின் சுவாரஸ்யம்!
அந்த சுவாரஸ்யம் தாண்டி இதில்ஒளிந்து இருக்கும் ஒரு சைக்காலஜி தெரியுமா? பல முக்கியமான போட்டிகளில் இருந்து 286 பெனால்ட்டி கிக்குகளின் முடிவுகளை அலசினார்கள். ஒவ்வொரு தருணத்திலும் பந்து எந்தத் திசையில் உதைக்கப்பட்டது, அதற்கு கோல் கீப்பர்களின் ரியாக்‌ஷன் என்ன என்று ஆராய்ந்தனர். முடிவு ஆச்சர்யம் அளித்தது. பெரும்பாலான பெனால்ட்டி கிக் தருணங்களில் பந்து இடமோ, வலமோ பாயாமல் நேராகத்தான் உதைக்கப்பட்டு இருக்கிறது. அப்போது எல்லாம் இடமோ வலமோ பாயாமல், கோல் கீப்பர்கள் இருந்த இடத்தில் நின்றாலே, பந்து கோல் வலைக் குள் செல்லாமல் தடுத்து இருக்க முடியும். ஆனால், அப்படியான சமயங்களில் 92 சதவிகித கோல் கீப்பர்கள் ஏதோ ஒரு திசையில் பாய்ந்து கோலைக் கோட்டை விட்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் உலகின் தலைசிறந்த கோல் கீப்பர்கள். யூகத்தில் ஏதோ ஒரு திசையில் பாய்ந்து ரிஸ்க் எடுக்காமல் இருந்த இடத்தில் இருந்தாலே பெரும்பாலான கோல்களைத் தடுத்து இருக்கலாம். ஆனால், அப்படி இருக்காமல், ஏன் பாய் கிறார்கள்?
நகராமல் நிற்கும் சமயமாகப் பார்த்து பந்து இடம்/வலமாகப் பாய்ந்து ஒருவேளை கோல் விழுந்துவிட்டால், அவ்வளவுதான். கோலி காலி. அதே அவர் வலப்புறமாகப் பாய்ந்த சமயம் பந்து இடப்புறமாகப் பாய்ந்து கோல் விழுந்தால்.. 'பாவம்.. அவனும் என்னதான் செய்வான்... நல்லாத்தான் பாய்ஞ்சு ட்ரை பண்ணான்!’ என்று உலகம் உச்சுக் கொட்டும். இதனால் தாவாமல் நடுவில் நின்றாலே பெரும்பாலான சமயம் கோல் விழாமல் தடுக்கலாம் என்று தெரிந்து இருந் தும் அதைத் தவிர்த்துப் பாய்கிறார்கள் பெரும்பாலான கோல் கீப்பர்கள். பல சூழ் நிலைகளில் நாமும் இப்படித்தான் ரியாக்ட் செய்கிறோம்.
சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்வார் களோ என்ற பதற்றத்திலும் தயக்கத்திலும் தவறான முடிவை எடுத்து அதைச் செயல் படுத்தி சொதப்பிவிடுகிறோம். சமயங்களில் எதுவும் செய்யாமல் இருப்பதே நாம் செய்யக்கூடிய சிறந்த செயல் என்பதை உணர்ந்தாலே, பெருமளவு சிக்கல்களில் இருந்து தப்பிவிடலாம்.
கொஞ்சம் காபி குடிக்கலாமா?  
அந்த கல்லூரிப் பேராசிரியரைப் பார்க்க அவருடைய முன்னாள் மாணவர்கள்வந்து  இருந்தார்கள். பல வருடக் கதைகளைப் பேசிச் சிரித்தவர்கள், தங்களுடைய பணி களைப் பற்றியும் அது தரும் அழுத்தம் பற்றி யும் புலம்பத் தொடங்கினார்கள். அப்போது அனைவரும் அருந்த பெரிய கேன் நிறைய காபி கொண்டுவந்தார் பேராசிரியர். ஒரு தட்டில் கண்ணாடிக் கோப்பை, பீங்கான் கோப்பை முதல் பேப்பர் கப் வரை விதவித மான காபி கோப்பைகள் இருந்தன. அனைவரும் அவரவருக்குப் பிடித்த கோப்பைகளை எடுத்துக்கொண்டு அதில் காபியை நிரப்பி அருந்துவதைப் பார்த்த பேராசிரியர் மென்மையாகப் புன்னகைத்துக்கொண்டே சொன்னார், ''தட்டில் இருந்த கோப்பைகளில் மிக விலை உயர்ந்ததும் அழகானதுமான கோப்பைகளை ஆளாளுக்குப் போட்டி போட்டு எடுத்துக்கொண்டீர்கள். மிகவும் எளிமையான கோப்பைகளை யாரும் சீண்டவே இல்லை. ஓ.கே... எதிலும் சிறப்பையே தேடுவது மனித இயல்புதான். ஆனால்,  உங்கள் தேவை இங்கே கோப்பை அல்ல; காபிதான். நீங்கள் எந்தக் கோப்பையை எடுத்தாலும், அதில் நிரப்பப் பட விருக்கும் காபி என்னவோ ஒன்றுதான்.
இங்கே நீங்கள் வாழும் வாழ்க்கை என்பது அந்த காபியைப் போன்றது. அதை ரசித்து, ருசித்து அருந்த உதவும் கோப்பைகள்தான் உங்கள் வேலை, சமூக அந்தஸ்து, செல்வச் செழிப்பு ஆகிய மற்றவை. நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி, காபியின் ருசியைத் தவறவிடுகிறீர்கள். காபியின் மணத்தை நாசிக்கு ஏற்றுங்கள் நண்பர்களே!''

No comments:

Post a Comment

What's in your mind?