‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Thursday, July 5, 2012

சத்தியம் என்பது.....

சத்தியம் என்பது நமக்குள்தான் இருக்கிறது. நாம்தான் கெடுதலுக்கு அதிகாரி. நம் எண்ணங்கள் அரக்கர்களாக உலாவர, உள்ளுக்குள்ளே இருக்கிற சத்தியத்தை ஒருமுறை தரிசித்தால் போதும். அல்லது உள்ளுக்குள் இருக்கிற சத்தியம் ஒருமுறை விழித்துக் கொண்டால் போதும்.நமக்குள் இருக்கிற அத்தனை கசடுகளும் அழிந்து ஒழிந்து விடும். இந்தச் சத்தியம் விழிப்பதுதான் ஞானம். சிவன் விழிப்பதுதான் ஞானம். சிவன் விழித்துவிட்டால், சிரித்து விட்டால், உள்ளுக்குள் இருக்கிற அத்தனை மாச்சரியங்களும் அழிந்து போகின்றன!'
- உடையார் நாவலில் பாலகுமாரன்

No comments:

Post a Comment

What's in your mind?