‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, July 17, 2012

புத்தங்களே என் உயிர்!

மரியாதைக்குரிய ஐயா ரோஜா முத்தையா அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. இவர் சேகரித்து பாதுகாத்த பொக்கிஷங்கள் இப்போது "ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்" என்று இவரது பெயரிலேயே பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

இவர் இயற்கை எய்திய போது விட்டுச்சென்ற புத்தகங்கள் ஒன்றரை லட்சத்திற்கும் மேல். இவர் செய்த அந்த உயரிய பணியை தொடர்ந்து செவ்வனே செய்து வருகின்றனர் நூலக நிர்வாகிகள். தலைமை ஏற்று நடத்துகிறவர் திருவாளர் சுந்தர் அவர்கள். அவருக்கு துணையாக துடிப்பான இளைஞர் சுப்பு. 

நூலகம் டைடல் பார்கிலிருந்து தொரைப்பாக்கம் செல்லும் சாலையில் மகளிர் பாலிடெக்னிக் அருகே பழைய தடையவியல் ஆய்வுக்கூடம் இருந்த கட்டடத்தில் இருக்கிறது.

லாப நோக்கமின்றி ஒரு தவம்போல் மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர். லட்சக்கணக்கான புத்தகங்கள், டிஜிடைசேஷன் எனப்படும் தொழில்நுட்பத்தால் கணிணியில் சேமிக்கும் பிரிவு, படங்களைப் பாதுகாக்கும் மைக்ரோ ஃபில்மிங் பிரிவு, மொழி ஆராய்ச்சி மையமான "இன்டஸ் ரிசர்ச் சென்டர்" என இந்நூலகத்தின் பிரிவுகள் ஏராளம்.

தேவார விளக்க வகுப்புகள், சங்க நூல் விளக்க வகுப்புகள் என பல்வேறு வகையில் தொண்டாற்றி வருகின்றனர்.

கார்ப்பரேட் துறையைச் சேர்ந்த என்னால் ஓரளவிற்கு மேல் இவர்களது பணியை உலகிற்கு உரைக்க இயலவில்லை. பதிவுதளத்தில் விவரங்கள் இட்டேன். விகடன் தலையிட்டு இவர்களது பணியை ஊருக்கு எடுத்துரைத்தால் கருத்தொற்றுமை உள்ள மக்கள் இதன் மூலம் ஒன்றிணைந்து ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திற்கு தங்களாலான சப்போர்ட்டை தர இயலும்.

இதனை ஒரு விண்ணப்பமாக வைக்கிறேன். 

No comments:

Post a Comment

What's in your mind?